Posts

Showing posts from March, 2023

சனி நினைச்சுட்டா யார் தடுத்தாலும் அவன் நினைச்சத சாதிச்சுடுவான்

  ஒருதடவை பார்வதி W/o சிவபெருமான் அழகா ஒரு மாளிகை கட்டினாங்க.... அதோட கிரஹபிரவேசத்துக்கு ஒரு ஜோசியர்கிட்ட நாள் குறிக்க சொன்னாங்க... அந்த மாளிகை கட்ட கடக்கால் போட்ட நாளை ஆராய்ஞ்ச அந்த ஜோசியர் சொன்னார்..." நீங்க இந்த மாளிகைய கட்ட கடைக்கால் போட்ட நேரம் சனி உச்சத்துல இருந்த நேரம்.. அதனால நீங்க என்னதான் அக்னி கம்பியும், அல்ட்ராடெக் சிமெண்டும் போட்டு கட்டி இருந்தாலும் இந்த மாளிகை நிலைக்காது... அதனால நீங்களே இடிச்சுடுங்க" இத கேட்ட பார்வதி செம்ம கடுப்ப்பாயிட்டாங்க.... லோகத்துக்கே பெரிய சாமியோட பொண்டாட்டி நான்.... பிசாத்து சனி என்னோட மாளிகைய இடிக்கிறதா.... நெவெர்... அப்படின்னு பொங்கல் வச்சாங்க.... புருஷன கூப்பிட்டு.... "யோவ்..... நீ இப்போவே அந்த சனிய பார்த்து..... இன்னமாதிரி எம்பொண்டாட்டி ஒரு பங்களா கட்டி இருக்கா.... அதுல நீ என்னவோ வேலை காட்ட போறியாம்... அதெல்லாம் வேண்டாம்"ன்னு சொல்லிட்டு வா" ன்னாங்க.. உடனே சிவன் சொன்னார்... புரிஞ்சுக்கோ பாரு..... நான் பெரிய சாமியா இருந்தாலும்... மத்தவங்க வேலைல குறுக்கிட்றது இல்ல.... தவிர... சனி எப்ப

#மனித_உடல்

Image
1: எலும்புகளின் எண்ணிக்கை: 206 2: தசைகளின் எண்ணிக்கை: 639 3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2 4: பால் பற்களின் எண்ணிக்கை: 20 5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி) 6: இதய அறை எண்: 4 7: மிகப்பெரிய தமனி: பெருநாடி 8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg 9: இரத்தம் Ph: 7.4 10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33 11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7 12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6 13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14 14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22 15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25 16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6 17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72 18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2 19: மிகப்பெரிய உறுப்பு: தோல் 20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல் 21: மிகப்பெரிய செல்: பெண் கருமுட்டை 22: மிகச்சிறிய செல்: விந்து 23: மிகச்சிறிய எலும்பு: நடுத்தர காது குத்துகிறது 24: முதல் மாற்று உறுப்பு: சிறுநீரகம் 25: சிறுகுடலின் சராசரி நீளம்: 7 மீ 26: பெரிய குடலின் சராசரி நீளம்: 1.5 மீ 27: பிறந்த குழந்தையின

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இல்லை

Image
  எழுதப் படிக்கத் தெரியாத ஒரு ஏழை. ஒரு மாதா கோயிலில் மணி அடிக்கும் வேலையை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறான். அந்த மாதா கோயிலுக்கு ஒரு புதிய பாதிரியார் வருகிறார். அவர் மணி அடிக்கும் ஆள் எழுதப்படிக்கத் தெரியாதவன் என்பதை அறிந்து, எழுத படிக்கத் தெரியாத ஒருவர் சர்ச்சில் வேலை செய்ய அனுமதி கிடையாது. உன்னை எப்படி வேலைக்கு சேர்த்தார்கள்? இன்னும் 15 நாள் உனக்கு அவகாசம் தருகிறேன். அதற்குள் நீ எழுத படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் உன்னை சர்ச் வேலையில் இருந்து நீக்கம் செய்து விடுவேன் என்று எச்சரித்து அனுப்புகிறார். இரவு வீடு திரும்பிய அவன் தன் மனைவியிடம் பாதிரியார் சொன்னதை வருத்தத்துடன் கூறி இத்தனை வயதுக்கு பிறகு நான் எங்கிருந்து எழுத படிக்க கற்றுக் கொள்வேன்? அதுவும் 15 நாளில் முடிகிற காரியமா? என்று கூறி வருந்துகிறான். அவன் மனைவி ஆறுதல் கூறி வேறு வேலை ஏதாவது பாருங்களேன் என்கிறார். இந்த மணி அடிக்கும் வேலையைத் தவிர எனக்கு வேறு என்ன வேலை தெரியும் என்று வருத்தமுடன் சொல்லிக் கொண்டே இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே நடந்து சற்று தூரம் சென்றான். மன அமைதி பெறலாம் என்ற எண்ணத்தில