இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஒரு கணக்கோடுதான் இயக்கபடுகின்றது, வானத்துக்கும் அதன் கோள்களுக்கும் அதன் இயக்கத்துக்கும் கணக்கு உண்டு, ஏன் அவற்றை படைத்து இயக்கும் பிரம்மனுக்கும் கணக்கு உண்டு ஆத்மாவுக்கும் கணக்கு உண்டு, அதன் பாவ புண்ணிய பெரும் கணக்கு உண்டு அதனை கழிக்க அதற்கு விதி எனும் கணக்கும் உண்டு , அந்த விதியினை சுமக்க வரும் பூமிக்கும் அதன் இயக்கத்துக்கும் கணக்கு அடிப்படையாக உண்டு அந்த விதி கணக்கில் பூமிக்கு வந்து பிரபஞ்ச பெரும் கணக்கை சொல்லி தந்துவிட்டு விதியின் கணக்குபடி இளமையிலே தன் கணக்கை முடித்துவிட்ட அந்த கணிதமேதை எந்நாளும் இந்திய பெரும் ஞானத்தின் அடையாளம் எத்தனையோ கணக்குகளை துல்லியமாக சொல்லி விடை தந்தவன் தன் விதிகணக்கினை மீறமுடியாமல் விடைபெற்ற நாள் இன்று ராமானுஜம் மிழ்நாட்டில் கடந்த எண்பது வருடமாக இருக்கும் பொய்களில் பிரதானமானது பிராமணர் சுரண்டல்காரர், பிராமணர் பணக்காரன் இன்னபிற உண்மை அது அல்ல, அக்காலத்திலே மகா ஏழை பிராமணர்களும் இருந்தார்கள். ஒருவேளை உணவுக்கே சிரமபட்டார்கள், ஆனால் அவர்களிலும் மகா மகா அறிவாளிகள் இருந்தார்கள் அவர்களில் ஒருவர்தான் சீனிவாச ராமானுஜம் அவர் ஈரோட்டி...
Posts
- Get link
- X
- Other Apps
கருட புராணம் - 5 (இறந்த பின் ஆத்மாவின் பயணம்) "மனிதன் இறந்ததும் அவன் என்னவாகிறான்? அவன் உயிர் எங்கே செல்கிறது? அந்த உடலுக்கு என்ன ஆகும்? உடலை என்ன செய்ய வேண்டும்? இறந்தபின் ஆத்மா செல்வதாக அனைவரும் கூறும் எமலோகம் என்பது என்ன? அது எங்கே உள்ளது? எவ்வாறு இருக்கும்?" என்று கருடன் வினவினான். அதற்குப் பகவான் கூறிய பதில்களை இங்கே காண்போம். "கருடனே! ஒருவனுக்கு மரணம் நிகழும் வேளையில் அவன் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைத் தெளிவாகக் கூறுகிறேன், கேள். இறக்கும் தருவாயில் மனிதனின் உடல் பாகங்கள் தன் சக்தியையும் உணர்வையும் இழக்கத் தொடங்கும். இந்த மாற்றம் நிகழாமல் மரணம் சம்பவிக்காது. ஒருவன் தூக்கத்திலேயே இறந்தாலும் கூட, இந்த உணர்வை அனுபவிக்காமல் அவன் உயிர் பிரியாது. இறக்கும் தருவாயில் எமதூதர்கள் அவன் அருகில் வந்து நிற்பார்கள். உயிர் வெளியேறும் அந்த நேரத்தில், ஆத்மா விழிப்படைந்து தனது உண்மைச் சொரூபத்தை அடைவதால், எமதூதர்கள் அருகே நிற்பதை அந்த ஆத்மாவால் கண்டிப்பாகப் பார்க்க முடியும். மரண தருவாயில் ஒருவன் எமனை நேரில் சந்திப்பான். சில உயிர்களை எமதூதர்கள் அடித்துத் துன்புறுத்துவதைய...