Posts

Showing posts from April, 2023

குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு

   1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு துணை புரியும். 3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள். 4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும். 5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையே ஓர் உணர்வு பூர்வமான

வாழைப்பழம்

  #வாழைப்பழம்_சாப்பட்டால் சளி பிடித்துக்கொள்கிறது என்று கூறி நாம் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறோம். உண்மையில், வாழைப்பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப்பழத்தை உண்டு வந்தால், ஒரு வாழைப்பழத்தில் 75 % தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 %, வைட்டமின் C 15 % மற்றும் பொட்டாசியம் 11% உள்ளது. இதில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது. இதன் தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப்படைப்பு. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது. தோலின் உட்புறத்தை, நமது சருமத்தின் மீது தேய்த்தால் கொசு நம்மை அண்டுவதில்லை. வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின

ஹீமோகுளோபின் பற்றாக்குறை சரிசெய்யும் சூப்பர் உணவுகள் என்னென்ன...

Image
  ஹீமோகுளோபின் குறைபாடு பிரச்சினை ரத்த செல்களில் சிதைவு, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி குறைபாடு, ரத்த உற்பத்தி குறைபாடு அனீமியா என்னும் ரத்த சோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன. இந்த ஹீமோகுளோபின் குறைபாட்டு பிரச்சினையை எப்படி சரிசெய்யலாம்? என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.   ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்றாலே அது வெறும் ரத்த சோகை பிரச்சினை தான் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் ஹீமோகுளோபின் குறைபாடு என்பது வெறும் ரத்த சோகை பிரச்சினையை மட்டுமே சார்ந்தது கிடையாது. அதைத் தாண்டி நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ​இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் இரும்புச்சத்து நம்முடைய உடலுக்கு மிகவும் அடிப்படையாகத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துக்களுள் ஒன்று. இது நம்முடைய உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரைிக்கச் செய்வதோடு ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. இறைச்சி, மீன், முட்டை, சோயா உணவுகள், உலர் பழங்கள், கீரைகள், நட்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. 19 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 8 மில்லி கிராம் அ

பல் சொத்தை வருவது ஏன்?

Image
  முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். 'பல் போனால் சொல் போகும்' என்பார்கள் பெரியோர். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். பல்லின் அமைப்பு பல்லானது வேதி அமைப்பில் கால்சியம், பாஸ்பரஸ் தாதுகளால் ஆனது. ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற மேற்பகுதிக்கு மகுடம் (Crown) என்று பெயர். பல், ஈறுக்குள் புதைந்திருக்கும் பகுதிக்கு வேர் (Root) என்று பெயர். பல் ஈறின் அடிப்பாகத்திலிருந்து, ஒவ்வொரு பல்லுக்குள்ளும் நடுவில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் செல்கின்றன. இந்தப் பகுதிக்குப் பல் கூழ் (Pulp) என்று பெயர். இதைச் சுற்றி டென்டைன் (Dentine) எனும் பகுதியும், அதற்கும் வெளியே வெள்ளை நிறத்தில் பல்லுக்கு ஓர் உறைபோல் அமைந்திருக்கும் எனாமல் (Enamel) எனும் கடினமான பகுதியும் உள்ளன. பல் சொத்தை பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை (Tooth Decay). குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என எல்லோரையும் இது பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவ

இராவணனின் மனைவி' மண்டோதரிக்கு ஸ்ரீராமபிரானின் விஸ்வரூப பாக்கியம்

  ராவணனை அழித்த பிறகு, போர்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்....!! அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.....!! அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை, ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புரிந்து கொண்டார்...!! உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்....!! “நீ யாரம்மா?” என்றார்....!! “நான் ராவணனின் மனைவி மண்டோதரி....!! என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!! ஆனால், அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.....!! மேலும். சத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் , என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.....!! ஆனால் நீ என்னிடம் வரவில்லை....!! ஆச்சரியப்பட்டேன்.....!! இங்கே நீ , என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்......! என் கணவரிடம் கூட , ரகு குலத்தில் உதித்த ராமன் , மனிதன் அல்ல.....!! உலகைக் காக்கும் பரம்பொருள்...!! விஸ்வரூபன்.....!!