Posts

Showing posts from May, 2023

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:

உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன். “உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.” “வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன். “உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.” “என்னது பிசினஸ் பார்ட்னரா...?" ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!” “முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு”

ரஷ்யா - உக்ரைன் போரில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்...???

எனது சம்பளம் எனது 4 bhk வீடு / பங்களா எனது கார், எனது தொழில், எனது தென்னந்தோப்பு, எனது பண்ணை வீடு போன்றவை. என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை மட்டுமே இவை அனைத்தும் பாதுகாப்பானது. மற்றபடி எல்லாமே புகையாக எழுவதற்கு அதிக நேரம் எடுக்காது. இன்று ரஷ்யா-உக்ரைன் போரில், 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிற அண்டை நாட்டாரைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம். அப்படி ஒரு போர் வந்தால் நமக்கு என்ன நடக்கும்...??? எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்... என் அன்பு இந்து மக்களே ??? மேற்கே பாகிஸ்தான் கிழக்கே வங்கதேசம், தெற்கே இந்தியப் பெருங்கடல், வடக்கே சீனா, நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்...! நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு இல்லை. வேறு வீடும் இல்லை, அக்கம் பக்கம் சுற்றி துரோகிகள்.. எனவே, மலிவான பெட்ரோல் வேணும், இலவசம் வேணும், உழைக்காம பணம் வேணும், இலவச ரேஷன் வேணும் ஆகியவற்றை விட, வலுவான தேசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். தேசம் வலிமையா இருந்தால் மட்டுமே நாம் இருப்
  கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். மூன்று வேளை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் முன் மரணம் வந்து விட வேண்டும். உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். நீ எல்லாம் வாழ்ந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் மற்றவர்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.......

படித்துவிட்டு பகிருங்கள், பிறருக்கு உபயோகப்படலாம்..

Image
ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும், அப்பழம் நாம் வாழும் இச் சூழ்நிலைக்கு, நம் உடலுக்கு நல்லதா என்றால் #இல்லை ...!!! இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள்...பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான் தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது. அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது. அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி... ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம். குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது. இங்கு வெள்ளையன் வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது. சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான், வந்தவன் மிளகை வாங்கிவ
Image
  பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்து, பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள்; கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்.. .* *01) எந்த நிலையிலும் வாழ்வின் கடைசி பகுதியில் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்)* *02) பேரக் குழந்தைகளின் மேல் எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள்* *03) விலகியே இருங்கள். உறவுகள் இனிமையாகத் தான் இருக்கும். என் பிள்ளை என் பிள்ளை என பதறாதீர்கள்.* *சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியாக இருங்கள்* *04) பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. கையில் பணம் இல்லாவிட்டால், பிள்ளைகளிடம் மதிப்பும், மரியாதையும், உரிமையும் நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் சுய சம்பாத்திய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிர வேண்டாம். முழுவதும் பகிர்ந்தால், நிற்க வேண்டியது நடுத்தெருவில் தான்.* *05