உண்ண உணவும் , உடுக்க உடையும் , வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்

உனக்கு வங்கியில் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். இந்த உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.
உன்னிடம் கணிப்பொறி இருந்தால் , நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.
நினைத்த நேரத்தில் , நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் , அவ்வாறு பேச வாய்ப்பே இல்லாமல் , இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.
நோயின்றி காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால் , அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே , உயிர் துறந்த பலரை விட நீ பெரும் பாக்கியசாலியே.
பார்வைத் திறனும் , செவித்திறனும் , வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் , அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.
போர் , பட்டினி , சிறை தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால் , உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள.
பற்பல கொடுமைகளுக்கு உள்ளாகாமல் , நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால் , உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.
உன் பெற்றோரை விட்டுப் பிரியாமல் அவர்களுடன் இருந்தால் , நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்.
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் , நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் தான்.
இந்த உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்குக் கூட இல்லை.
கல்வி அறிவு பெற்று , இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால் , உலக அளவில் எழுத படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்று உள்ளாய்.
இணையத்தில் இந்த செய்தியை , உன்னால் படிக்க முடிந்தால் , அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.
உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் , அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும் , நம்பிக்கையும் இல்லாதவர்களை விட , நீ கொடுத்து வைத்தவன்.
நீங்கள் அனுபவித்து வரும் , வசதிகளையும் தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் , ஏன் அது பற்றிய அறிவே கூட இல்லாமல் , கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க , ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது , நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா ?!!!
நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்....
வீண் கவலைகளை விட்டு , அந்தக் கவலைகளைக் காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள் , போதை பொருட்கள் என்பவற்றை விட்டு விட்டு , நான் அதிர்ஷ்டசாலி என்ற தைரியத்தோடு உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள.இவை அனைத்துமே கடவுள் நமக்கு கொடுத்த விலை , உயர்ந்த பரிசுகள்.

Comments

Popular posts from this blog

"ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்"