🤣🤣🤣
முருகேசு : அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '
அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ?"
முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..
9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு..?
63 ன்னு சொன்னேன் ..
அப்பா : சரி அப்புறம்...
முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ..
அப்பா : அதே எழவு தானேடா. வரும்... சரி நீ என்ன சொன்ன.. ?
முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "
அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன் "
அடுத்த நாள்,
முருகேசு : அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"
அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்..
முருகேசு : சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு..
அப்பா : எதுக்குடா ?
"முருகேசு : drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் ..
அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்..
ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்..
அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு .
அப்பா : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? லூசா அவன்?.. சரி நீ என்ன பண்ணுன..?
முருகேசு : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படிடா நிக்க முடியும் லூசாடா நீன்னுதான் சொன்னேன்.. உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு ..
அப்பா : சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன் "
அதற்குஅடுத்த நாள்,
முருகேசு : இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா "
"அப்பா : இல்லடா நாளைக்கு வரேன் "
" முருகேசு : நீ போக வேணாம் பா "
"அப்பா : ஏண்டா?"
முருகேசு : ஸ்கூலேர்ந்து என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க "
அப்பா : ஏண்டா..? என்னாச்சுடா?"
முருகேசு : ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார் .. அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க "
அப்பா : சயின்ஸ் டீச்சரா ..!! அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான் ?"
முருகேசு : அதைத்தான் பா நானும் கேட்டேன் .
டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க "
😂😂😂😜
*பெற்றோரிடம் கற்றபடியே பிள்ளைகளும் வளர்கிறார்கள்*
*பெற்றோரிடம் கேட்டதையே பிள்ளைகளும் பேசுகிறார்கள்*
நல்ல மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் மட்டுமல்ல பெற்றோர் ஆகிய நாமளும் கூட அது நம் கடமையும் கூட நன்றி🙏🏻👍🏻👍🏻👍🏻🤝🤝🤝❣️❣️❣️

Comments

Popular posts from this blog

"ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்"